விபத்தில் சிக்கிய 7 மாதக் குழந்தை உயிரிழப்பு – தந்தை கைது

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று பின்னோக்கி செல்லும் போது, லொறியின் இடது பின்பக்க சக்கரத்தின் கீழ் சிக்கிய 1 வயது 7 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர், தெப்பலமுல்ல பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விபத்துக்குப்பின், 39 வயதான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments