கனடாவின் நீதி அமைச்சராக யாழ்ப்பாணத்தில் பிறந்த கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றார்

கெரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் கனடாவின் வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவராக இந்தப் பதவியை வகிக்கிறார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி.

இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து கெரி ஆனந்தசங்கரி கனடா சென்றார். கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார். மேலும், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்கார்பரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக கெரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். புதிய அமைச்சரவை பதவியேற்பின்போது கெரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் - இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பதவியேற்பு கனடா தமிழ் சமூகத்திற்கு ஒரு பெருமையான நிகழ்வாகக் கருதப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரியின் அரசியல் வாழ்க்கை மற்றும் சமூகப் பணிகள் கனடா தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன.

Post a Comment

0 Comments