வெப்பம் அதிகரிக்கும் – நாளை வெதுவெதுப்பாக இருக்கும் பகுதிகள் எவை?

நாட்டின் பல பகுதிகளில் நாளை (ஏப்ரல் 17) வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பம் அதிகரிக்கக்கூடிய பகுதிகள்:

* வடக்கு மாகாணம்

* வடமத்திய மாகாணம்

* வடமேல் மாகாணம்

* சப்ரகமுவ மாகாணம்

* தென் மாகாணம்

* கிழக்கு மாகாணம்

* இரத்தினபுரி மற்றும் மொனராகல மாவட்டங்கள்

இந்த இடங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுரை:

* வெளிப்புற செயல்பாடுகளை குறைக்கவும்

* போதுமான அளவு தண்ணீர் அருந்தவும்

* வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும்

வெப்ப அலை காரணமாக ஏற்படக்கூடிய சீரழிவுகளை தவிர்க்க, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments